කුවේට් පොදු සමාකාලය පිළිබඳ විශේෂ නිවේදනය




විශේෂ නිවේදනයයි
1. කුවේට් රජය විසින් ප්‍රකාශයට පත් කර ඇති පොදු සමා කාලය තුළ ශ්‍රී ලංකාවට යාමට බලාපොරොත්තු වන ශ්‍රී ලාංකිකයින් දඩ මුදල් ගෙවීමකින් තොරව සියරට යැවීම සඳහා ශ්‍රී ලංකා රජය කුවේට් රජය සමඟ නිරන්තරයෙන් කටයුතු කරමින් සිටී. සියරට යැවීමේ ක්‍රියාවලිය ඇරඹිය හැක්කේ ලංකාව තුළ කොරොනා වෛරසය ව්‍යාප්තිය පාලනය කොට ගුවන් තොටුපල විවෘත කිරීමෙන් අනතුරුවය.
2 මේ සම්බන්ධව ශ්‍රී ලංකාවේ ගරු අග්‍රාමාත්‍ය මහින්ද රාජපක්ෂ මැතිතුමා, කුවේට් රජයේ ගරු අග්‍රාමාත්‍ය ෂෙයික් කාලීද් අල්-හමාද් අල්-සබාහ් මැතිතුමා සමඟ 2020 අප්‍රියෙල් මස 16 වන දින දුරකථනයෙන් සාකච්ඡා කරන ලද අතර, නිපුණතා සංවර්ධන, රැකියා හා කම්කරු සබඳතා සහ විදේශ සබඳතා අමාත්‍ය ගරු දිනේෂ් ගුණවර්ධන මැතිතුමා කුවේට් රජයේ විදේශ කටයුතු අමාත්‍ය ගරු අහමඩ් නාසර් අල්-මොහම්මද් අල්-සබාහ් මැතිතුමා සමඟද සාකච්ඡා කිරීමට යෙදුනි.
3 දුරකථන සාකච්ඡාවෙන් පසුව ශ්‍රී ලාංකිකයින් සඳහා පොදු සමා කාලය දීර්ඝ කිරීම පිළිබඳව සලකා බැලීමට එකඟ වී ඇති අතර, ඒ පිළිබඳව පිළිතුරක් අපේක්ෂාවෙන් සිටී.
4 ගුවන් ගමන් බලපත්‍ර තමන් සතු නම් කුවේට් රජය විසින් නම් කර ඇති ස්ථාන වෙත 2020.04.21 දින සිට 2020.04.25 දින දක්වා වාර්තා කළ හැකිය. කුවේට් රජයේ ලියාපදිංචි වන අයට කුවේට් රජය විසින් ශ්‍රී ලංකාවට යවන තෙක් නවාතැන් සපයන නමුත්, ශ්‍රී ලංකාවේ ගුවන් තොටුපල විවෘත කර සියරට පැමිණෙන්නන් භාරගැනීමට සූදානම් වන තුරු ඔවුන්ට මෙම ස්ථාන වල රැඳී සිටීමට සිදුවනු ඇති අතර වෙනත් ස්ථාන වලට ගමන් කිරීමට හෝ මාරුවීමට අවසර නොලැබෙනු ඇත.
5. විදේශ ගමන් බලපත්‍ර නොමැති අය කුවේට් බලධාරීන් විසින් භාර නොගැනීමට ඉඩ ඇති බැවින් තානාපති කාර්යාලයෙන් දැනුම් දෙන තුරු දැනට වාසය කරන ස්ථාන වල තවදුරටත් රැඳී සිටින ලෙස උපදෙස් දෙමු. තාවකාලික ගමන් ලියවිලි නිකුත් කිරීම ශ්‍රී ලංකාවේ ආගමන විගමන දෙපාර්තමේන්තුවේ උපදෙස් පරිදි ඉදිරියේදී සිදු කරනු ලැබේ. ඒ සඳහා ඔබගේ පැරණි ගමන් බලපත්‍රයේ පිටපතක් සූදානම් කොට තබාගත යුතුය.
6. ශ්‍රී ලංකාවේ ගුවන් තොටුපල විවෘත කිරීමෙන් පසුව සහ විශාල පිරිසක් නිරෝධායනය කිරීමට අවශ්‍ය පහසුකම් සූදානම් කිරීමෙන් අනතුරුව, ශ්‍රී ලංකා රජයේ උපදෙස් පරිදි ඔබගේ ගමන් ලියවිලි නිකුත් කිරීම ආරම්භ කරන අතර ඒ සඳහා දිනයක් සහ ස්ථානයක් ඉදිරියේදී දැනුම් දීමට බලාපොරොත්තු වෙමු.
முக்கிய அறிவித்தல்
1. COVID-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் குவைத் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குவைத் அரசினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பொது மன்னிப்பு தொடர்பிலும் விமான நிலையம் மீளத் திறக்கப்பட்டதன் பின்னர் இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புதல் சம்பந்தமாகவும் இரு அரசுகளும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.
2. இந்த பொது மன்னிப்பு தொடர்பாக கடந்த ஏப்ரல் 16 , ம் திகதியன்று இலங்கையின் பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்கள் குவைத் நாட்டின் பிரதமர் அதிமேதகு ஷேக் ஸபாஹ் காலித் அல்-ஹமத் அல் ஸபாஹுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலொன்றை நிகழ்த்தியிருந்தார்.இதற்கு முன்னர் இலங்கையின் வெளியுறவுகள், திறன்கள் விருத்தி , வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் , கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களும் குவைத் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ அஹ்மத் நாஸர் அல் முஹம்மத் அல் ஸபாஹுடன் இது தொடர்பில் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியிருந்தார்.
3. மேற்படி தொலைபேசி கலந்துரையாடல்களைத் தொடர்ந்து பொதுமன்னிப்பு காலப்பகுதியை இலங்கையர்களுக்கு நீடித்துக் கொடுப்பது தொடர்பில் பரிசீலனை செய்வதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கிறோம்.
4. தற்போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டொன்றை வைத்திருக்கும் இலங்கையர்கள் தாம் விரும்பினால் குவைத் அரசினால் இலங்கையர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஏப்ரல் 21-25,2020 காலப்பகுயில் செல்ல முடியும் . அவ்வாறு சென்று தம்மை பதிவு செய்பவர்கள் முதற் கட்டமாக தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுவர். அத்தோடு இவ்வாறு தங்குவோர் அவ்விடங்களிலிருந்து வெளியேறவோ வேறு இடங்களுக்கு செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த ஏற்பாடுகள் இலங்கையில் விமான நிலையம் திறக்கப்பட்டு , வருகை தருவோரை ஏற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடுகள் முடியும் வரையிலும் தொடரும்.
5. கடவுச்சீட்டு அல்லது தற்காலிக பயண ஆவணம் இல்லாத நிலையில் பொது மன்னிப்பில் நாடு செல்ல இலங்கையர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லும் இலங்கையர்களது பதிவு விண்ணப்பங்கள் குவைத் அதிகாரிகளால் நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகும் . எனவே கையில் கடவுச்சீட்டு அல்லது தற்காலிக பயண ஆவணம் இல்லாதோர் தூதரகத்தின் மறு அறிவித்தல் வரும் வரை காத்திருக்குமாறும், தற்போது அவர்கள் தங்கியுள்ள வதிவிடங்களிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் வினயமாக கேட்டுக் கொள்கிறோம். இலங்கையில் விமான நிலையம் திறக்கப்படுவது சம்பந்தமாகவும் , வருகை தருவோரை ஏற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்தியடைதல் சம்பந்தமாகவும் இலங்கையிலிருந்து தகவல் வந்த பின்னர் கடவுச்சீட்டு இல்லதோருக்கான பயண ஆவண விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது சம்பந்தமாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துடன் ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நடைமுறைக்காக இறுதியாக பயன்படுத்திய கடவுச்சீட்டின் பிரதியை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இவ்விண்ணப்பங்களை ஏற்கும் இடம் , காலம் குறித்து மேலதிக விபரங்களை தூதரகம் அறிவிக்கும் வரை காத்திருக்குமாறு உங்களை வினயமாகக் கேட்டுக் கொள்கிறோம்.

Post a Comment

0 Comments